Pages

Wednesday, April 11, 2012

நிஜங்கள் நிழல்கள்

கலங்காமல் கரை தாண்டி வர
நான் கடல் நீர் அல்ல
கரை தொடும் ஆசை இருந்தும்
அலையின்றி அடக்கப்பட்ட அணைநீர்

தேங்கி கிடக்கும் என்னை நெருங்கி
கல்லெறிந்து பார்க்காதே எனக்கு
ஏங்கி கிடக்கத்தான் தெரியும் எனினும்
ஓங்கி எழத் தெரியாது - போதும்

சுகமாய் கால் நனைத்துப் போக இது
உப்பு கடல் நீர் அல்ல - நண்பனே
தப்பு கானல் நீர் ஏமாந்து போகாதே
என்னை விட்டு எழுந்து போ .......

Sudum Nila

இரவு  நேர  நட்சத்திர  கும்பலில்  
    நிலவு  என்றும்  தனி  தான்  இதை
அறியாத  நிலவு  நிதம்  தேய்வதும் 
    வளர்வதும்  ஒரு  கதை  தான்
    



Saturday, March 3, 2012

தனிமை

ஆர்ப்பரிக்கும்  எண்ண  அலைகள்
        எனக்குள்      மோதும்    போதும்  
ஆனந்த   அருவி   வெள்ளமாய்  
        எனக்குள்  வழியும்    போதும் 

தனிமை  நதி தவிப்பாய்   
       என்னை   தழுவும்   போதும் 
என்னை  பகிர்ந்து   கொள்ள   
        என்  கனவுகளில்   சிறகடித்து  

உடன்  பறக்க,  என்  லட்சிய  
         நிஜங்களின்    தோள் சேர்த்து  
திசை  தேட   யாரும்   இல்லை       
          ஜன   சமுத்திரத்தில்    தனியொரு   

தீவாய்  நான்  நிற்கும்   போது
           நெஞ்சு   குழிக்குள்   நெருப்பாய்
 ஒரு    நெருடல் ...........................

Thursday, March 1, 2012

உனக்குள் நான்




ஒரு பிறவியேனும் வேண்டும்

உன் கருவறையில்
தெய்வமாக வேண்டாம்

கோபுரத்தில் பொம்மையாக
வேனும் வாழ .......

உள்ளம் கவர் கள்வன்

யார் அந்த கள்வன் என்
உள்ளம் கவர் கள்வன்

தினம் தினம் வருகிறான்
        தோள் மீது சாய்த்து என்
துயர் தீர்க்க பார்க்கிறான்


உச்சியிலே இதழ் பதித்து
           உறவாக எனை சேர்த்து
உயிர் சக்தி ஊட்டினான் அவன் ....


இதம் தரும் பார்வையிலும்
              இதழோர நகைப்பிலும் என்
என் சோகம் நீக்கி சொர்க்கம் தந்தான்


அவன் மார்பில் முகம் பதித்து
             என் மனம் உருகி விழி நீர் கசிய
விருட்டென்று எழுந்தேன் - ஐயோ


யார் அந்த கள்வன் - காணத்
        தவிக்கிறேன் என் முகமறியா
                                                        நாயகனை


வாழ்க்கை கானலானாலும் கனவுகளை
             கவிதையாக்கிய - எங்கே அவன் என்
                             என் உள்ளம் கவர் கள்வன் ..

எனக்கென நீ

உன் இதயத் துடிப்பை என்
தாலாட்டாக கேட்டு தூங்கவும்


விழித்திருக்கும் நேரமெல்லாம் உன்
விழி வட்டத்தில் வாழவும்


மரணத்தின் மடியிலும் உன்
உதட்டணைப்பில் உயிரடங்கவும்


வரம் வேண்டும் ........
பிடித்த உணவு உடை கொள்கை
பிடிவாதமாக பின்பற்று உனக்குள்
இருப்பவள் சக்தி அவளை கொண்டாடு
போற்று அலங்கரி சக்தியை
காத்தலே தற்காத்தல் ...........................