Pages

Tuesday, June 8, 2010

சருகுகள்

என் மனதுக்குள் ஒரு நொடி
பவனி வந்து பார் தெரியும்

வண்ணம் கலைந்த ஓவியங்களுக்கும்
வாசம் இழந்த மலர்களுக்கும்

துயரம் கடந்த பயணங்களுக்கும்
தூக்கம் தொலைத்த இரவுகளுக்கும்

அப்பால் புத்தகத்தின் நடுவில்
பத்திரபடுத்திய மயிலிறகைப் போல

உன் நினைவுகள் வந்து மெதுவாய்
உயிர் கிளறி விட்டு போவது புரியும் ...........

No comments:

Post a Comment